சிறுமியின் மரணம்: ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேருக்கு விளக்கமறியல்

<!–

சிறுமியின் மரணம்: ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேருக்கு விளக்கமறியல் – Athavan News

16 வயதுடைய சிறுமியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரின் பிணை விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை மற்றும் சகோதரர், தரகர் உள்ளிட்ட நால்வருக்கும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பாக குறித்த நால்வரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *