வித்தியாசமான வாசம் வீசியது! தம்பலகாமத்தில் பற்றியெரிந்த அடுப்பு

திருகோணமலை – தம்பலகாமம், பாலம் போட்டாறு பகுதியில் நேற்று (1) இரவு 7.00 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

எனினும், வீட்டில் உள்ள எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

இரவு சாப்பாட்டை சாப்பிடுவதற்காக கறியை சூடாக்கிக் கொண்டிருக்கும் போதே அடுப்பு வெடித்தாகத் தெரிவிக்கின்றனர்

மேலும், எரிவாயு சிலிண்டர் (வாங்கி) கொள்வனவு செய்து 22 நாட்களே ஆகின்றன.

கறி சுட வைக்கும் போது வித்தியாசமான வாசம் வீசியதாகவும் உடனடியாக குசினிக்குள் சென்று பார்க்கின்ற போது அடுப்பு வெடித்து தீப்பற்றி எரிந்தது.

உடனடியாக தண்ணீர் ஊற்றி அனைத்ததோடு சிலிண்டரிலில் உள்ள குழாயையும் கழற்றி வீசியதாக பாதிக்கபட்டவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *