தம்பலகாமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி பாஞ்சான் குளத்தை அண்டிய காட்டு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்தவர் 14 கொலனி வென்ராசன்புர, கந்தளாவைச் சேந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஆர்.எம்.சந்தன பிரேம காந்த வயது – 55 என பொலிஸார் தெரிவித்தனர்

மேலும், திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணையின் பின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது

இதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *