2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 16வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
அதனை நினைவு கூறும் வகைமில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகில் அமைதியான முறையில் நினைவு கூறல் இடம்பெற்றது.
கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக குறிப்பிட்ட சிலர் மாத்திரமே இவ் நினைவு தினத்தில் கலந்து கொண்டு விளக்கேற்றி உயிரிழந்த மாணவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.