ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த சிறுமியான ஹிஷாலினி, தீ காயங்களுடன் கடந்த மாதம் மூன்றாம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 15ம் திகதி உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் யுவதியொருவர் பாலியல் துஷ்பிரயோக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *