வரிசையில் நிற்பதற்கு ஐந்து பிள்ளைகள் பெற்றெடுப்பதை கட்டாயமாக்கவும்! பி.ஹரிசன் கிண்டல் பேச்சு

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக திருமணத்தின் பின்னர், ஐந்து பிள்ளைகள் பெற்றெடுப்பதை கட்டாயமாக்குமாறு முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை நகரில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் அனைத்து விடயங்களுக்கும் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதை அடுத்தே, தான் இந்த யோசனையை அரசாங்கத்திற்கு முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

”இளைய பிள்ளையை எண்ணெய் வரிசையில் நிறுத்த முடியும், இரண்டாவது பிள்ளை எரிவாயு வரிசையில் நிறுத்த முடியும், மற்றைய பிள்ளையை பால்மா வரிசையில் நிறுத்த முடியும், அடுத்த பிள்ளையை சீனி வரிசையில் நிறுத்த முடியும், கஞ்சியையாவது அருந்துவதற்காக அடுத்த பிள்ளையை அரிசி வரிசையில் நிறுத்த முடியும்”

இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *