சென்னை- பெருங்குடி பகுதியில் வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆன்லைனில் விளையாட்டில் பணத்தை இழந்ததே இதற்கு காரணமென பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விளையாட்டில் பணத்தை இழந்த காரணத்தினால், பலரிடம் கடன் வாங்கியதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு கடன் தொல்லையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.