கனடாவின் டொராண்டோ நகரில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் டொராண்டோவின் கென்சிங்டன் மார்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் அளித்த தகவலின் படி, ஸ்பாடினா அவென்யூ மற்றும் நாசாவ் தெருவின் மூலையில் காலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அழைப்பு வந்தது.
Advertisement
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்த 4 பேரை கண்டறிந்தோம், அதில் இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்ததாக பொலிஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு பேர் சம்பவயிடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் டொராண்டோ அவசர சேவை துணை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்த தகவல் எதுவும் வழங்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.