நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து செல்வதால் பல்வேறு விடயங்கள் தடைப்பட்டே காணப்படுகின்றது.
அதுபோலவே கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என ஓய்வூதியத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஓய்வூதியத் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகளுக்காக 1970 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.