பெரும் பாதிப்படைந்துள்ள மீன்பிடித்துறை! தீர்வு காண ஒன்றுகூடவுள்ள மீனவ சங்கங்கள்

வெளிநாட்டவர்கள் இலங்கையின் கரையோர பகுதிகளில் நிலத்தினை கையேற்பதன் காரணமாக, மீன்பிடித்துறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், திடீர் என அண்மையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் காரணமாகவும் மீன்பிடித்துறை பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரையோர பகுதிகளில் உள்ள மீன் வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் அவர் தெரிவித்துள்ளதோடு, இலங்கையில் உள்ள சகல மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் ஒன்று கூடி இது குறித்து விரிவாக ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களது கோரிக்கைகள் உதாசீனப்படுத்தும் பட்சத்தில், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply