அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்று முதல் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்று (03) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதார வழிகாட்டலுக்கு அமைய, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நடத்துவது குறித்து உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் பரவிய கொவிட் பெருந்தொற்று காரணமாக, சுமார் 6 மாத காலம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னணியில், இன்று முதல் அனைத்து வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்படுகின்றன

இதனால், 2021ம் ஆண்டின் இறுதி பாடசாலை விடுமுறை நாட்களை 10 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *