சிவனடிபாதமலைக்கு வந்த யாத்திரி ஒருவர் தனக்குத்தானே தீ வைத்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கு நல்லதண்ணி நகரிலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் நிகழ்ந்து உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
குடும்ப தகராறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயம் அடைந்த நிலையில் அவர் 1990 காவு வண்டி மூலமாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்