சகல பாடசாலைகளும் இன்று முதல் மீள திறப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் இன்று முதல் (திங்கட்கிழமை) மீள திறக்கப்படுகின்றன.

டிசம்பர் மாத விடுமுறையினைத் தொடர்ந்து பாடசாலைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில் மாணவர்களைக் குழுக்களாகப் பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை 20 சதவீதத்தால் இன்று முதல் உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply