யாழில் 5 பேர் கொரோனாவால் மரணம்-வெளியானது முழு விபரம்..!

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர் என தெரியவந்துள்ளது.

அத்தோடு , அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

அத்தோடு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *