புத்தளம் இளைஞர்கள் மத்தியில் ஜே.வி.பியினர் கலந்துரையாடல்

புத்தளம் – கரைத்தீவு இளைஞர்களுக்கும் ,மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்கும் , இடையிலான சிறப்பு சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.

இச்சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் தோழர் கயான் ஜானக, செயற்பாட்டாளர் தோழர் ஹிஸாம் ஹூஸைன் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

இதன்போது “நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இளைஞர்களின் பங்கு” எனும் தலைப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் விரிவாகக் கலந்துரையாடினார்.

ஊரின் அபிவிருத்தியில் நாட்டம்கொண்ட இளைஞர்கள் சிலர் முன்வந்து, நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் என மக்கள் விடுதலை முன்னணி புத்தளம் செயற்பாட்டாளர் தோழர் ஹிஸாம் ஹூஸைன் தெரிவித்தார்.

அத்துடன், கரைதீவு – பொன்பரப்பி மக்கள் மத்தியில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் கூட்டணி மீது வளர்ந்திருக்கும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இளைஞர்களின் கருத்துக்களில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *