அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி-தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீதிக்காவல் கடமையிலிடுபட்ட பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய அனுமதி பத்திரத்துக்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதன்போது டிப்பர் வாகனமும் அதன் சாரதிகளுமே இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு கைது செய்யப்பட்ட சாரதிகள் தருமபுரபொலீஸ் நிலையத்தில் விசாரணைகள் நடைபெற்று பின் பொலிஸ் பிணையவிடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.