மன்னாரில் ஒருவர் கொரோனாவால் சாவு!

மன்னார் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2022ஆம் ஆண்டு கொரோனாத் தொற்றால் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு இதுவாகும்.

மாந்தை மேற்கைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 30 ஆம் திகதி மன்னார் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 3 ஆயிரத்து 183 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *