பிரதமர் மஹிந்த இராஜினாமா குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவலை பிரதமர் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என்றும், புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகின.

எவ்வாறாயினும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பயப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *