நான்கு வாரங்களுக்கு நாடு முடக்கப்படுமா?

உச்சத்தை தொடும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியன, சுகாதார கட்டமைப்பினால் சமாளிக்க முடியாதென சுகாதார தரப்பு கூறியுள்ளது.

அத்தோடு நேற்று வெளியான அறிக்கையில் 111 கொரோனா மரணங்கள் பதிவாகி இருந்தமை அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது என அரசாங்கத்திடம் சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது..

மேலும் நாளாந்தம் 3000தை அண்மித்த தொற்றாளர்களும், நாளாந்தம் 100ஐ அண்மித்த உயிரிழப்புக்களும் பதிவாகி வருவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு கடந்த 13 நாட்களில் மாத்திரம் 1000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பாலான வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றில் உயிரிழந்தோரின் சடலங்கள் பெருமளவு காணப்படுவதாகவும், கொரோனா தொற்றாளர்களினால் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளதாகவும் சுகாதார தரப்பு கூறுகின்றது.

நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *