பொன்னாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் குடும்பப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கணவனை விட்டு பிரிந்த நிலையில், சில காலமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான 26 வயதுடைய குடும்பப்பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *