பாலர் பாடசாலை ஆசிரியருக்கு ஒமிக்ரான்; 20 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்..!

கம்பஹா – மினுவங்கொடை – நில்பனாகொட பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மினுவங்கொடை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த பாலர் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு கல்விகற்ற 20 மாணவர்கள், ஆசிரியை உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான பாலர் பாடசாலை ஆசிரியைக்கு, சில தினங்களுக்கு முன்னர் கொரோனா நோய் அறிகுறிகள் இருந்தமையினால் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது இதுவரையில் உறுதியாகவில்லை.

மாணவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லை என்றும் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *