தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை (புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 22ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவு பெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஆலய பரிபாலனள சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் காரணமாக மாவட்ட சுகாதார அதிகாரி வலி. வடக்கு பிரதேச செயலாளர், வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர், அரச அதிபர் ஆகியோர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய சமூகப்பொறுப்புடன் மஹோற்சவ காலம் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவிழா யாவும் உள்வீதியில் மட்டுமே நடைபெறும். உபயகாரர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவர். உள்வீதியில் மட்டும் சுவாமி வீதிவலம் வருதல் இடம்பெறும்.

ஆலய வெளிவீதியில் தரிசிக்க வரும் பக்தர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுகாதார விதிகளைப் பேணி வழிபாடு செய்தல் வேண்டும். இயன்றவரை சிறுவர்கள் முதியோர்கள் வீட்டில் இருந்து வழிபாடு செய்யுங்கள்.

காவடி நேர்த்திகள், வீதிப்பிரதிஷ்ட்டை தவிர்க்கப்பட்டுள்ளது. வியாபார நிலையங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது.

இயன்றவரை மிக அமைதியாக அம்பாளின் திருவிழா நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *