நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது ஒமிக்ரான்! விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

இலங்கையின் முக்கிய கொரோனா திரிபு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மாறும் என சுகாதார அமைச்சின் பிரதான இணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோர் மீது விமான நிலையத்தில் வைத்து நடத்தப்படும் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால் மரபணு ஆய்வுக்கு அனுப்பப்படுவார்கள்.

கொரோனா மாறுபாடுகளை அடையாளம் காண மரபணுச் சோதனை பயன்படுத்தப்படுகிறது.

டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் மாறுபாடு மூன்று மடங்கு வேகமாகப் பரவுகிறது என பரிசோதனை காட்டுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *