யாழ் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இன்று திங்கட்கிழமை இனங்காணப்பட்டுள்ளார்.
இவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மூளை மலேரியாவினை ஏற்படுத்தும் கிருமித் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இந்நபர் தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர்.
கடந்த ஒரு மாதத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளி இவராவார்.
எனவே யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மலேரியா நோய் நுளம்பின் மூலம் பரவலைத் தடுக்க நுளம்பு பெருகும் இடங்களை இல்லாது ஒழித்தல் மிகவும் அவசியமான கடமையாகும்.