இலங்கையில் மேலும் 18 பேரை பலியெடுத்த கொரோனா!

இலங்கையில் நேற்றையதினம் கொரோனா தொற்றால் 18 பேர் உயிரிழந்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,037 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 179 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,128 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 587,935 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்தை அடித்து துரத்தி நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஓரணியில் திரளுங்கள்! ஐ.தே.க. அறைகூவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *