கடும் ஆபத்தான கட்டத்தில் நாடு உடனடியாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவும் : எச்சரிக்கும் சுகாதார தரப்பினர்

இலங்கையில் தற்போதுள்ள அபாய நிலையை கருத்திற் கொண்ட தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் அதிவேகமாக கோவிட் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த குறைந்தது நான்கு வாரங்கள் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளாந்தம் அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்களும், கொவிட் மரணங்களும் சுகாதார துறையினருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனை கருத்திற் கொண்டு நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது என அரசாங்கத்திடம் சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

நாளாந்தம் 3000தை அண்மித்த தொற்றாளர்களும், நாளாந்தம் 100ஐ அண்மித்த உயிரிழப்புக்களும் பதிவாகி வருவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 நாட்களில் மாத்திரம் 1000 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றில் உயிரிழந்தோரின் சடலங்கள் பெருமளவு காணப்படுவதாகவும், கொவிட் தொற்றாளர்களினால் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளதாகவும் சுகாதார தரப்பு கூறுகின்றது.

நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *