
கதிர்காமம் பெரிய கோவில் தீர்த்தமான மாணிக்க கங்கைக்குரிய புதிய நுழைவாயில் சுவர் நிர்மாணப்பணிகள், ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டன.
ஜனாதிபதி, அமைச்சர்களான சமல் ராஜபக்ச, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச மற்றும் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர ஆகியோரும் இந்த நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.