
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுறா இறகு, கடலட்டைகள், மஞ்சள் கட்டிகள் என சுமார் 40 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் மண்டபம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
34 மூடைகளில் பதுக்கப்பட்டிருந்த ஆயிரத்து 700 கிலோ மஞ்சள், 13 மூடைகளில் பதுக்கப்பட்டிருந்த 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய 100 கிலோ கடலட்டைகள் என்பனவே அவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.