தமிழகம் மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு!

தமிழகம் மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேலும் கூறியுள்ளதாவது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் அரசியல் செய்ய முனைகின்றது.

ஆகையினால், இந்த அணையை கட்டும் விவகாரத்தில்,  தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் என்ன கூறினாலும் அதை கேட்க மாட்டோம். அணையை கட்டுவது மாத்திரமே எங்களின் நோக்கமாகும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை ஒன்றினை மத்திய அரசிடம்  சமர்ப்பித்துள்ளோம்.

மத்திய அரசசும் அணை கட்டுவதற்கு விரைவில் அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் மேகதாதுவில் அணை கட்டப்படுவது உறுதி” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *