யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கெதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் அராஜக செயல்பாட்டை கண்டித்து இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
மேலும் முதல்வர் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தோடு தமக்கான உரிய தீர்வு விரைந்து கிடைக்காத விடத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பித்தக்கது.