முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ஓட்டங்கள் சேர்ப்பு- துடுப்பெடுத்தாடுகிறது தென்னாபிரிக்கா!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், டீன் எல்கர் 11 ஓட்டங்களுடனும் கீகன் பீட்டர்சன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், தென்னாபிரிக்கா அணி 167 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

ஜோகனஸ்பர்க்கில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 50 ஓட்டங்களையும் அஸ்வின் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், மார்கோ ஜென்சன் 4 விக்கெட்டுகளையும் ராபடா மற்றும் ஒலீவர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள தென்னாபிரிக்கா அணி, நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா அணி, இன்று தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *