நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை 2 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த அபராத தொகை, ஒரு இலட்சம் ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.