கிழக்கு கடற்படையின் புதிய தளபதி-ஆளுநர் இடையே சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை, கிழக்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் சந்தித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இச் சந்திப்பு இடம்பெறுள்ளது.

அத்துடன், சஞ்சீவ டயஸ் பதவியேற்ற பிறகு ஆளுநரை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

மேலும், ஆளுநருக்கும் சஞ்சீவ டயஸுக்கும் இடையே ஒரு சிறப்புக் கலந்துரையாடலும் இதன்போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *