ஒரு மாத காலத்தில் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி! வாசுதேவ நம்பிக்கை

இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முகங்கொடுத்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை நாம் அறிவோம். அவர்கள் விரக்தி அடைந்துள்ளதை ஏற்கிறோம்.

கொரோனா நிலைமையினால் ஏற்பட்ட இந்த பின்னடைவு விரைவில் சீராகும். மக்களின் நிலை குறித்து கவலையடைகிறோம்.

எம்மால் என்ன செய்ய முடியும். அரசின் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். வரிசையில் உள்ள மக்களின் சிலிண்டர்களை தூக்கினால் அவர்களின் சுமை குறையுமா? இந்த பிரச்சினைகளுக்கு தந்திரோபாயமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் நிலைமை சீராகும் என நம்புகிறோம்.

2022 ஆம் ஆண்டில் நீர்கட்டணம் அதிகரிக்கப்படாது. முன்பு நஷ்டத்தை சந்தித்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போது இலாபம் ஈட்டி வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார்? முருத்தெட்டுவே தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *