கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள்

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உளநல பொருட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.

சுவிஸ் மக்களின் நிதி உதவியுடன் சாந்திகம் நிறுவனத்தினால் இந்தப் பொருட்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டன.

இந்த பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் உள்ளிட்டோரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று சிகிச்சை நிலையங்களிற்கு தேவையான பொருட்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டன.

இவை கிருஸ்ணபுரம், பாரதிபுரம், முறிகண்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கொரோனா தொற்று சிகிச்சை நிலையங்களில் உள்ள நோயாளர்களின் உளநல விருத்திக்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *