யாழ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தமிழகத்தில் கைது!

யாழ்.தொண்டமனாறு பகுதியை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

மாணிக்கவாசகம் மோகனராஜா(42) படகு மூலம் தமிழக கடலோரப் பகுதியான நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அவர் சட்டவிரோத முறையில் வருகைதந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply