
சுமார் 17 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் 2021 நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 1 முதல் நவம்பர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 17 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டதாக வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.
முன்னதாக அக்டோபர் மாதத்தில் 20 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 படி வாட்ஸ்அப் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்திய விதிகள் மற்றும் வாட்ஸ்அப் விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.