ராஜபக்ஸ அரசு ஆண்டு இறுதிக்குள் வெடித்துச் சிதறும்! ருவான்

2022ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் அரசாங்கம் வெடித்து சிதறிவிடும் என்பது மிகத் தெளிவாக புலப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் வெடித்து சிதறும் போது மக்களை பாதுகாக்கக் கூடிய ஒரே தலைமைத்துவத்தை கொண்டுள்ள கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி பல சவால்களை எதிர்கொண்டது. எனினும் கட்சியை வலுப்படுத்த பல தரப்பினர் தற்போது உதவி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாரை விலத்திவிட்டும் வரைபை கையொப்பமிட்டு அனுப்புவோம்! வினோ எம்பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *