கிளிநொச்சியில் உடும்பினை வேட்டையாடிய ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உடும்பினை வேட்டையாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரிடமிருந்து உடும்பு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த பொலிஸார் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இந்நிலையில், குறித்த குற்றத்திற்காக 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், உயிருடன் மீட்கப்பட்ட உடும்பினை பாதுகாப்பாக விடுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

பேருந்துகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *