
2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் இருக்கும் 40 சடலங்களை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சடலங்களை மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த சடலங்களை அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.