
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்குகு எதிரான வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் அவரை விளக்கமறியலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவியதாக தெரிவித்து ரிஷாட் பதியுதீன் ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரிவு 6 (1) ன் விதிகளின்படி சி.ஐ.டி.யால் பெறப்பட்ட 72 மணிநேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதனால் அவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரிவு 9 (1) ன் படி 90 நாள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.