
கேரளாவின் கொச்சி அருகே உள்ள முனம்பம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விபின் மற்றும் பரவூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தமிழக மீனவர்களின் 3 படகுகள் தீக்கிரையாகின. பல கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு படகில் தீப்பிடித்து அடுத்த படகிற்கு பரவியதும் படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர்தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.