இந்தியாவிலிருந்து கடல்வழியாக குருநகர் நுழைந்த இளைஞன்

இந்தியாவில் இருத்து கடந்த 8 ஆம் திகதி நபர் ஒருவர் மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் குருநகரில் அடையாளம் காணப்பட்டார்.

அதன்படி, 25 வயதான இவர் நேற்று முன்தினம் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அவர் இன்று செவ்வாய்க்கிழமை, குருநகர் கிழக்கு-ரெக்கிளமேசன் பகுதியில் வீடொன்றில் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டார்.

மேலும், தனது 12 வயதில் குடும்பமாக விமானம் மூலம் இந்தியாவுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது அங்கு தந்தை உயிரிழந்து விட்டதாகவும், தாயார் சுகவீனமடைந்துள்ளதாகவும், குடும்ப வறுமை காரணமாக தொழில் செய்ய குருநகரிற்கு வந்ததாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *