நல்லூர் கந்தனின் உற்சவ நாட்களில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற முற்றாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும்இ
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் ஆலயத்தில் பிரதட்டை (அங்கப்பிரதட்சணம்) அடித்தல்இ கற்பூரச்சட்டி எடுத்தல்இ காவடிஇ தூக்குக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தாகசாந்திஇ அன்னதானம் வழங்குதல் என்பனவும் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆலய சூழலிலும்இ அதனை அண்டிய பகுதிகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு வழி வகுக்கும் தெய்வீக சொற்பொழிவுகள்இ தெய்வீக இசையரங்குகள்இ கலை நிகழ்ச்சிகள்இ களியாட்ட நிகழ்வுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் என்வற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆலய உற்சவ காலத்தில் ஆலய சூழலில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது.