இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள தடை உத்தரவு!

திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே, இன்று நள்ளிரவு முதல் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தாதுள்ளார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த எண்ணிக்கை திருமண மண்டபங்களின் ஆசன எண்ணிக்கை 500 க்கும் அதிகமாக காணப்பட்டால் 150 ஆகவும், 500 க்கும் குறைவாக காணப்பட்டால் 100 ஆகவும் காணப்பட்டது.

இந்த நிலையில், கொவிட் கட்டுப்பாட்டு ஆலோசனை வழிகாட்டுதல்கள் இன்று சுகாதார அமைச்சினால் வௌியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *