கொரோனா தொற்றால் உயிரிழந்த வைத்தியர்

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த உயிரிழந்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

எனினும், அவர் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதன்படி, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மசாந்த, கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியர்களுள் ஒருவராவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் கண்டி- மஹாய்யாவ மயானத்தில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *