யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டம்!

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜீவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை நுழைவாயில் முன்பாக இன்று காலை முதல் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் அராஜக செயல்பாட்டை கண்டித்து இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

முதல்வர் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தமக்கான உரிய தீர்வு விரைந்து கிடைக்காத விடத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *