ரிசாட்டுக்கு 18ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரிசாட் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி ரிசாட் மற்றும் ரியாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Advertisement

முதலாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், சற்று முன்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *