அடையாளப் பணிப்புறக்கணிப்பில் சுகாதார ஊழியர்கள்!

தென் மாகாணத்தில் தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, இன்று  காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வுகள் உரிய முறையில் வழங்கப்படாதமையால் சுமார் 13 ஆயிரம் தாதியர்களுக்காக பதவி உயர்வுகள் இல்லாமல்போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என காதார தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைகள், அமைச்சுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், தென் மாகாணத்திலுள்ள 09 ஆதார வைத்தியசாலைகள், அனைத்து பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 47 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் சுகாதார ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *