யாழில் இளம் கர்ப்பிணிப் பெண் கொரோனாவால் மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் நேற்று (09) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

30 வயதுடைய குறித்த கர்ப்பிணிப் பெண் யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியைச் சேர்நதவராவார்.

குறித்த பெண் திருமணம் முடித்த ஓராண்டே பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் நேற்று (09) வாந்தியெடுத்து மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வெளிநோயாளர் பிரிவிலேயே மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

குறித்த பெண்ணின் சடலத்திலிருத்து மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *